13-மே-2020 அன்று நிதியமைச்சர் அறிவித்த திட்டத்தின் எனது பின்னூட்டம்:
முன்குறிப்பு:
நான் பொருளாதார அறிஞன் கிடையாது.
MSME (சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) 3 லட்சம் கோடி அடமானமில்லா (collateral free) கடன் அறிவித்து இருக்கிறார்கள்.
மேலோட்டமா பார்த்தா நல்லா தெரியுது.
இதுல தகுதி வாய்ந்த நிறுவனம் யார் என்று இப்ப தான் சொல்றாங்க (Redefinition)
1 கோடி ரூபாய் முதலீட்டில் 5 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் தொழில் செய்யும் நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகவும், 10 கோடி ரூபாய் முதலீடு செய்து 50 கோடி ரூபாய் வரை ஆண்டு வணிகம் செய்யும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும், 20 கோடி ரூபாய் முதலீட்டில் 100 கோடி ரூபாய் வரை ஆண்டு வணிகம் செய்யும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
கடன் உச்சவரம்பு எவ்வளவுன்னு சொல்லலை.
வழக்கம் போல, பெருநிறுவனங்கள் இந்த தொகையை ஆட்டையை போடுவாங்களான்னு தெரியலை.
நலிவடைந்த மற்றும் செயல்படாத சொத்துக்களை கொண்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் துணைக் கடன் வழங்கப்படும்ன்னு சொல்றாங்க.
இது அனைத்தும் வங்கித்துறையை சார்ந்தே நடைமுறைக்கு வரும்.
எந்த வங்கி எந்த தொழிலுக்கு எவ்வளவு தரும்/ தரணும்னு எந்த விதியையும் சொல்லல.
அதனால வங்கி மேலாளர் விருப்பம்/ முடிவின் படி தான் கடன் கிடைக்கும்.
தொழிலாளர் வைப்பு நிதிக்காக நிறுவனங்கள் மற்றும் தொழிலார்கள் செலுத்த வேண்டிய தொகையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நிற்க.
எல்லாருக்கும் கிடையாது.
எந்த நிறுவனத்தில் 100 பேருக்கு கீழ இருக்காங்களோ & யாருடைய சம்பளம் 15,000 கீழ இருக்கோ அவங்களுக்கு மட்டும் தான்.
TDS & TCS 25% குறைச்சிருக்காங்க :-)
இது நல்ல செய்தியா தெரியுது.
எல்லா தொழில்லயும் 2 சிக்கல் இருக்கு.ஒன்னு உற்பத்தி (Supply) இன்னொன்னு சந்தை தேவை (Demand).
இந்த அறிவிப்பு உற்பத்தி பற்றி மட்டும் தான் சொல்லுது.
மக்கள் கிட்ட வாங்க பணமில்லைன்னா இதனால எந்த பயனும் இல்ல.
நாளைக்கோ இல்ல அப்புறமா எதாவது நல்ல செய்தி சொல்வாங்களான்னு பார்க்கணும்.
நேத்து, நிலைமையை நாங்க நல்ல உணர்ந்திருக்கோம்னு பிரதமர் சொன்னார்.
தற்சார்புக்கு முக்கியத்துவம் தருவோம்ன்னு சொன்னார்.
நான் தலையாய சிக்கலா பார்க்குறது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையா சொந்த ஊருக்கு போய்ட்டிருக்காங்க, அவங்கள மேலும் துன்பப் படுத்தக்கூடாது. அவங்க சொந்த ஊருக்கு போவதற்கு ஏதாவது பண்ணனும்.
ஆனா, அவங்கள பத்தி எதுவுமே சொல்லல.
இவங்களோட தற்சார்பு இந்தியாவில அவங்கல்லாம் இல்லை போல :-(
வாழ்க பாரதம்!!!
Wednesday, May 13, 2020
Subscribe to:
Posts (Atom)